முடக்கு வாதம் என்பது நாள்பட்ட, உள்பரவிய அழற்சியினை உருவாக்கும் ஒரு உடல்நலச் சீர்கேடாகும். இந்நோய், பல திசுக்களையும் உடல்உறுப்புகளையும் பாதிக்கும் என்றாலும் முதன்மையாக வளையுந்தன்மையுடைய புற நீர்ம மூட்டுகளையேஅதிகம் தாக்குகிறது. இந்நோய்நிகழ்வு, மூட்டுறை செல்கள் மிகைப்பெருக்கமடைவதால் உண்டான மூட்டுப்பை வீக்கம், அதிகப்படியான மூட்டுறை திரவம், நாரிழைய வளர்ச்சியினால் மூட்டுச்சவ்வில் உருவான படலம் ஆகியவற்றினால் இரண்டாம்பட்சமாக விளையும் மூட்டுகளைச் சுற்றியுள்ள உறையின் மீதான அழற்சித் தாக்குதலை உள்ளடக்கியதாகும்.
அறிகுறிகள்